(*) மின்னிலே சுழன்றிடும் மிக்ஸியின் ஆட்சியில் மண்ணிலே புதைந்தன அம்மியும் குளவியும்.. (*) அறவை மில்களின் ஆற்றலின் உதவியால் உரலும் உலக்கையும் உதவாக் கரைகளாம்.. (*) ஆயத்த மாவினில் ஆப்பமும் தோசையும்.. ஆட்டு கல்லுக்கு அலுவலும் இல்லையாம்.. (*) குடங்கள் சுமந்து கொண்டு வந்திட்டார் குடிநீர் ஒருகாலம்!! குழாய்கள் இப்போது. (*) அறிவீர் ஓருண்மை.. ஆதியில் சொன்ன கருவிகள் மாறின கடைசியில் பலனென்ன? (*) மறைந்த அம்மியில் கரங்களின் வலிமையும் உரலின் மறைவினில் உரமான தேகமும் (*) குடைகல்லின் மறைதலில் விரல்களின் வீரியம் குடங்களின் மறைதலில் கொடியிடை மேனியும் (*) கூடவே மறைந்ததை குறையல்ல! வரமென்றோம் மாடர்ன் உலகுக்கு மாறுதல் பலமென்றோம்.. (*) அறிவியல் வளர்ச்சியில் யாவுமே நடந்திடும் துரிதமாய்..அங்ஙணம் மரணமும் வரின்? (*) குறைவாய் உழைப்பும் கூடுதல் உணவும் நிறைவாய் சேர்க்கும் நீள்பிணி நம்மில்.. (*) உண்ணுதலொத்த உடலுழைப்பும் உழைப்பிற்கேற்ற உணவுகளுமே முன்னவர் சொல்லிய முறை ஆகும்.. (*) விகிதம் மாறா விதம், உடல்பேணிடும் சகிதம்வாழ, நம் அகவை சதமென்றாதல் சாத்தியமே ---அதிரை என்.ஷஃபாத்
நலமில்லா நவீனமும்.. உழைப்பில்லா உடல்களும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
மிக அருமையான ஆழமிக்க கவிதைகள்! தோழரின் கவி ஒலியும் கேட்டேன், தங்கள் குரலும், கவி மொழிந்த விதமும் அருமை ! பாராட்டுக்கள்.
கவிதை கருத்துப்பொதிவுடன் அருமை. தலைப்பும் நச்
கருத்துரையிடுக